Tuesday 29 October 2013

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளிதிருநாள் வாழ்த்துக்கள் 


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீபாவளி
தீபாவளி
தீபாவளியன்று வழக்கமாக ஏற்றப்படும்விளக்குகள்
மாற்றுப் பெயர்தீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்
அனுசரிப்பவர்கள்இந்துக்கள்,சீக்கியர்கள்,சமணர்கள் சமய ரீதியாகவும் ஏனைய இந்தியர்கள் காலாச்சார ரீதியாகவும் கொண்டாடுகின்றனர்.
வகைசமய, இந்திய
முக்கியத்துவம்மகிழ்வினை கொண்டாடுதல்
நாள்ஐப்பசி அமாவாசை
கொண்டாட்டங்கள்வீடுகளை விளக்குகளால் அழங்கரித்தல், வெடி வெடித்தல், பரிசு பரிமாரல்
அனுசரிப்புகள்பூஜைகள்
தீபாவளி (சமக்கிருதம்दीपावली அல்லது தீப ஒளித்திருநாள்என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்பெறுகின்ற ஓர் இந்துபண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ்ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையைஐப்பசி அமாவாசை முன் தினம் நரக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். கிரெகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத மத்தியிலிருந்து நவம்பர் மாத மத்தியம் வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. திருமாலின் கிருஷ்ண அவதாரத்தில் நரகாசுரன் என்ற அரக்கனை கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.[1]
இந்தியா, நேபால், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும்,சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்.

'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.பெயர்க் காரணம்[தொகு]

]

இந்துக்களின் தீபாவளி[தொகு]

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.
  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்.
  • புராணக் கதைகளின் படி,கிருஷ்ணரின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது கிருஷ்ணர் வராக(பன்றி) அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன், தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணர் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.[2]
  • கிருஷ்ணர்நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

சீக்கியர்களின் தீபாவளி[தொகு]

  • 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி[தொகு]

  • மகாவீரர் நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை[தொகு]


தீபாவளி பட்டாசு
மூடு
0:00
சீறிப் பாயும் ராக்கெட் வெடி
தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் (கங்கா குளியல்)
செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.
தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலானதென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும்(குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்றுஇனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். தீபாவளிஇலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.
தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும்,குங்குமத்தில் கௌரியும்சந்தனத்தில் பூமாதேவியும், புத்தாடைகளில்மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.. அன்றைய தினம், எல்லா நதிகள்ஏரிகள்குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

]

மேற்குநாடுகளில் தீபாவளி[தொகு]

மேற்குநாடுகளில் தீபாவளிக்கு முக்கியத்துவம் உண்டு. மற்றபல இந்து விழாக்கள் போல் அல்லாமல் அனைத்து இந்துக்களும் எதோ ஒரு வழியில் தீபாவளியை கொண்டாடுவதாலும், கிறிஸ்துமஸ், இட் போன்ற கொண்டாட்ட காலங்களில் வருவதாலும், வட இந்திய இந்துக்களுக்கு இப்பண்டிகை அதிமுக்கியத்துவம் கொண்டதாக அமைவதாலும் தீபாவளி சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு இது Festival of Lights என்று அறியப்படுகின்றது. தீபாவளி பல்லினப் பண்பாட்டின் கொண்டாட்டங்களில் ஒன்றாக மருவி வருகின்றது.


Tuesday 22 October 2013

தமிழ்மொழியின் சிறப்பு

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது.


கன்னடா------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது.           ஆனால்

 தமிழில்----

தமிழ்,      தமிழ்ச்செல்வி,     தமிழ்ச்செல்வன் , தமிழரசன்,     தமிழ்க்கதிர்,   தமிழ்க்கனல்,

மிழ்க்கிழான்,      தமிழ்ச்சித்தன்
தமிழ்மணி,     தமிழ்மாறன்,        தமிழ்முடி, தமிழ்வென்றி,     தமிழ்மல்லன்,     தமிழ்வேலன், தமிழ்த்தென்றல்,  தமிழ்த்தும்பி,  தமிழ்த்தம்பி,

தமிழ்த்தொண்டன்,   தமிழ்த்தேறல்,    தமிழ்மறை, தமிழ்மறையான்,    தமிழ்நாவன்,    தமிழ்நாடன், தமிழ்நிலவன்,    தமிழ்நெஞ்சன்,     தமிழ்நேயன், தமிழ்ப்பித்தன்,     தமிழ்வண்ணன்,    தமிழ்ப்புனல், தமிழ்எழிலன்,    தமிழ்நம்பி,        தமிழ்த்தேவன், தமிழ்மகன்,     தமிழ்முதல்வன்,    தமிழ்முகிலன்.
செந்தமிழ்செல்வன்       செந்தமிழ்ச்செல்வி
முத்தமிழ்,   முத்தமிழ்ச்செல்வி........ 

நீள்கிறது ஒரு பட்டியல் 


தமிழன் மட்டுமே,   தமிழை மொழி   மட்டுமல்லாது
உயிராக நேசிக்கிறான்!!

உணவா... விஷமா?



கோலா குளிர்பானங்களின் மருத்துவ குணங்களை ஆராயும் முன், அவற்றில் உள்ள கலவைப் பொருட்களைத் தெரிந்துகொள்வோம்.
 
கார்பன் டை ஆக்ஸைடு கலந்த சோடா, எல்லா பானங்களுக்கும் பொது. அதற்கு அடுத்து 'அதிக ஃப்ரெக்டோஸ் சோளச்சாறு’  (High Fructose Corn Syrup - HFCS) மூன்றாவதாக ஃபாஸ்போரிக் அமிலம். கேரமல், சிட்ரிக் அமிலம், சோடியம் பென்ஸயோட், வினிகர், புரோமின் கலந்த எண்ணெய், ரெட் 7 இன்னும் பல 'இயற்கை நிறங்களும், கலவைகளும்’ எல்லா பானங்களுக்கும் பொது. கோகோ கோலாவில் கொகெயின் + கேஃபின், பெப்ஸியில் கேஃபின் மட்டும் உண்டு. இந்தக் கலவைகள் காலத்துக்கு ஏற்ப, அன்றாட சட்ட திருத்தங்களுக்கு ஏற்ப அவ்வப்போது மாற்றப்படுவது உண்டு. கோகோ கோலாவில் இருந்த கொகெயின் தடைபடுத்தப்பட்டதால், பின்னர் நீக்கப்பட்டது. செவன் அப்-ல் இருந்த லித்தியம் மன உற்சாகத்தை தூண்டும் பொருளாக கருதப்பட்டதால், பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இவை தவிர, பெயர் குறிப்பிடப்படாத சில ரகசிய பொருட்களும் உண்டு. 'கோகோ கோலாவின் ரகசிய ஃபார்முலா அட்லான்டாவில் உள்ள வங்கியின் லாக்கரில் இருக்கிறது. அது இரண்டே பேருக்கு மட்டும்தான் தெரியும்' என்றும் நம்பப்படுகிறது. இனி, குளிர்பானங்களில் உள்ள ஒவ்வொரு வேதிப்பொருளும் உடல் நலத்தை எப்படி பாதிக்கும் என்பதை பார்ப்போம்.


முதலில், கரியமில வாயு எனப்படும் 'கார்பன் டை ஆக்ஸைடு'. உயிருக்குத் தேவையான ஆக்ஸிஜனுக்கு நேர் எதிரான வாயுதான் இந்த கார்பன் டை ஆக்ஸைடு என்று உங்களுக்குத் தெரியும். இதைத் தண்ணீரில் அழுத்தத்துடன் கரைத்துக் குடித்தால் என்ன நிகழும்? பானத்தின் அமிலத் தன்மை அதிகமாகும். அமிலத் திரவம் வாயில்படும்போது பற்களின் எனாமல் கரையும். வயிற்றுக்குள் போனவுடன் அமிலத்தன்மையினால் புண் உண்டாகலாம். அண்மையில் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஒரு சாப்பாட்டுப் போட்டி நடைபெற்றது. அதில் ஒரே நேரத்தில் எட்டு பாட்டில் கோலா குடித்த ஒரு மாணவன், உடனே இறந்துவிட்டான். கார்பன் டை ஆக்ஸைடுதான் காரணமாகக் கருதப்பட்டது. ஆண்களின் மலட்டுத்தன்மைக்கும் இது ஒரு காரணமாக இப்போது கருதப்படுகிறது. ஆனாலும் சோடா குடித்தவுடன் காற்று ஏப்பமாக வெளியேறும்போது வயிறு சரியாகிவிட்டதாக ஒரு மன நிறைவும் சுகமும் உண்டாவதுதான் இதை மறுபடியும் குடிக்கத் தூண்டுகிறது!

குளிர்பானங்களின் அடுத்த முக்கிய கலவை 'ஹெச்.எஃப்.சி.எஸ்' எனப்படும் 'அதிக ஃப்ரெக்டோஸ் சோளச்சாறு'. இதைப்பற்றி நீங்கள் சற்று விரிவாகவே தெரிந்துகொள்வது அவசியம். ஆரம்பத்தில் கரும்பில் இருந்து எடுக்கும் சீனிதான் குளிர்பானங்களில் சேர்க்கப்பட்டது. இதன் விலை அதிகமாக இருந்ததாலும், இனிப்புச் சோளம் (Sweet Corn) அதிகமாக விளைந்ததாலும், பின்னர் சீனிக்குப் பதிலாக, 'சோளச்சாறு' உபயோகிக்க ஆரம்பித்தார்கள். கரும்பு விவசாயத்தைவிட, சோள விவசாயம் மலிவானது. அமெரிக்க அரசு இதற்கு நிறைய மானியம் கொடுக்கிறது. இதையெல்லாம்விட இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களில் சோளம்தான் மிகவும் முக்கியமானது (மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைப் பற்றிய மருத்துவ உண்மைகளை பின்னர் விளக்கமாகப் பேசுகிறேன்).

கரும்பு சீனியிலும், சோளச் சாறிலும் இருப்பது சுக்ரோஸ் (Sucrose). சுக்ரோஸ் என்பது, குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் ஆகியவற்றின் கூட்டு. கரும்புச் சர்க்கரையில் குளூக்கோஸ், ஃப்ரெக்டோஸ் ஒவ்வொன்றும் 50% இருக்கும். மேலும் அவை ஒன்றோடொன்று வேதியல் இணைப்பில் இருக்கும். சோளச்சாறு சர்க்கரையில் ஃப்ரெக்டோஸ் 55 சதவிகிதமும், குளூக்கோஸ் 45 சதவிகிதமும் வேதியல் இணைப்பின்றி, வெறுமனே உதிரியாகக் கலந்திருக்கும்.

குளூக்கோஸைவிட, ஃப்ரெக்டோஸ் பல மடங்கு இனிப்பானது. பழங்களிலும், தேனிலும் முக்கியமாக இருப்பது ஃப்ரெக்டோஸ்தான் (ஆனாலும் பழங்களில் உள்ள அபரிதமான நார்ச்சத்தும், தேனில் உள்ள மற்ற இயற்கைக் கலவைகளும் இந்த ஃப்ரெக்டோஸ் கெடுதல் விளைவிக்காமல் பாதுகாக்கின்றன). கரும்புச் சர்க்கரை வயிற்றில் ஜீரணமாகும்போது குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் கூட்டு உடைக்கப்பட்டு, பிறகுதான் உறிஞ்சப் படுகிறது. ஆனால், சோளச்சாறில் உள்ள குளூக்கோஸ் + ஃப்ரெக்டோஸ் கூட்டு, உதிரிக்கலவையாக இருப்பதால்... உடனே சிதறி வெகு சீக்கிரம் உறிஞ்சப் பட்டு ரத்தத்தில் கலக்கிறது. ஆகவே, கரும்புச் சர்க்கரையைவிட... சோளச் சர்க்கரை அதிக ஆபத்தானது என்பதில் சந்தேகமில்லை.

இந்த சோளச்சாறு சர்க்கரையை இயற்கையான சர்க்கரையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சோளச்சாற்றில் பல்வேறு வகையான வேதியியல் முறைகளைப் புகுத்திதான் இந்த சர்க்கரை உருவாகிறது. இதில் பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்திருக்கின்றன என்பது உண்மை. அதில் பாதரசம் கலந்திருக்கிறது என்பது அதி அதிர்ச்சியான தகவல்.
மலிவானதும், மிகவும் இனிப்பானதும் என்பதால் பல்வேறு உணவுப் பொருட்களில் தற்போது உலகெங்கும் இந்த சோளச்சாறு சர்க்கரை சேர்க்கப்படுகிறது. குளிர்பானங்கள் தவிர, ஜாம், ஐஸ்கிரீம், பேக்கரி பதார்த்தங்கள், பல்வேறு தானிய உணவு வகைகள், ரொட்டிகள் என்று பலவற்றிலும் இது தற்போது முக்கிய அங்கம் வகிக்  கிறது. 1960-ல் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் 1970-ல் அமெரிக்காவுக்குள் நுழைந்து, அன்று முதல் இன்று வரை உலகம் முழுவதும் உள்ள மக்களின் உணவுப் பழக்கத்தை அடியோடு மாற்றிப் போட்டுவிட்டது இந்த சோளச்சாறு சர்க்கரை.

சமீபகாலங்களில் சோளச்சாறு சர்க்கரை தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கிளப்பிய சர்ச்சையைத் தொடர்ந்து, சோளம் பதனிடும் அமைப்புகள் கடுமையான எதிர் பிரசார யுத்தத்தில் இறங்கியுள்ளன. ''சோளச் சர்க்கரையும் கரும்புச் சர்க்கரையும் ஒன்றுதான். இனிமேல் 'ஹெச்.எஃப்.சி.எஸ்' (HFCS) என்று சொல்லாமல் 'கரும்புச் சர்க்கரை' என்பது போல, 'சோளச் சர்க்கரை' என்று நாமகரணம் சூட்ட வேண்டும்'' என்று அமெரிக்காவின் மருந்து, உணவு தரக்கட்டுப்பாட்டின் உச்சபட்ச அமைப்பான 'எஃப்.டி.ஏ'-வுக்கு  (FDA)  மனு செய்தனர். ஆனால், அதை அந்த அமைப்பு ஏற்கவில்லை. இதுதான் சந்தர்ப்பம் என்று கரும்புச் சர்க்கரை ஆலை அதிபர்கள் எதிர்பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 'கரும்புச் சர்க்கரைதான் உடலுக்கு நல்லது. சோளச்சாறு சர்க்கரை கெடுதல்’ என்ற ரீதியில் அவர்கள் அறிக்கை வெளியிட்டார்கள். இதை எதிர்த்து, அமெரிக்க நீதிமன்றங்களில் சர்க்கரை ஆலைகளுக்கு எதிராக சோளச்சாறு அமைப்புகள் தொடர்ந்த வழக்குகள், தற்போது நிலுவையில்.

இரண்டையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு என்ன தோன்றுகிறது? கரும்புச் சர்க்கரை, சோளச் சர்க்கரை - இரண்டில் எது ரொம்ப கெட்ட சர்க்கரை என்பதுதானே? 'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பது போல. 'கரும்புச் சர்க்கரை கெடுதல்' என்றால், 'சோளச் சர்க்கரை மிகவும் கெடுதல்' என்பதுதான் உண்மை.

நன்றி          முன்பு  ஆல் இடுகையிடப்பட்டது

Monday 21 October 2013

மனித உடலின் மர்மங்கள்

மனித உடலில் புதைந்துள்ள‍ அரிய தகவல்கள்::
>இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்

>ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.

>நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கு ம் அளவு 400 கன அடி காற்று.

>மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராண வாயுவில் 20 சதவிகித அளவு.

>உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடது பக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.

>உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.

>ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.

>இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணுலியூக் கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.

>இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.

>மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.

>ரெடினா என்பது விழித்திரை

>ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறி குறி சுவை குறைந்து விடும்.

>ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேரு மிடம்.

>கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.

>மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி

>ப்ளூரா என்பது நுரையீரல் உறை

>இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
>அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.

>ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.

>உடலில் 206 எலும்புகள் உள்ளன.

>பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகா லையும் இணைக்கும் எலும்பு

>மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொ டை எலும்பு.

>மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.

>மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.

>முகத்தில் உள்ள எலும்புகள் 14.

>கைகளில் உள்ள எலும்புகள் 27.

>மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.

>மூளையில் பெரிய பகுதி பெருமூளை – செரிப்ரம் என்று அழைக்கப் படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபக ம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.

>உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்

நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.

>எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000கோடி இரத்த சிவப்பணுக் களை உருவாக்குகிறது.

>மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.

>மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.

>பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.

>30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.

>குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்

>ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.

>சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.

>இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.

>இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.

>ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.

>குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.

>உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்

>உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.

>மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.

>உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.

>ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.

>வெஸ்டிபுலே–எனப்படுவது பற்கள், கன்னத்திற்குஇடைப்பட்ட பகுதி.

>சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள். சுவாசிக்கு ம் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியா கும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.

>இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.

>இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.

>உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபி டெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என் றும் அழைக்கப்படுகிறது.

>மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.

>நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.

>கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என் று அழைக்கப்படுகிறது.

>ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.

>ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி

>எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.

>மனிதஉடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3மில்லியன்களுக்குமேல் உள்ளன.

>செரடோனின்–வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.

>வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.

>இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.

>பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.

>பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ் சுதல்.

>உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.

>பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது

நீங்கள் AIRTEL வாடிக்கையாளரா !! !

கீழே உள்ள தொடர் இன்னொரு வலைப்பூவில் சுட்டது .மன்னிக்கவும் நாலு பேறுக்கு நல்லதுன  அது  தப்புஇல்ல !







நீங்கள் AIRTEL வாடிக்கையாளராக இருந்து பல இன்னல்களை சந்தித்து

 இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்

 உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

 உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது

உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை
(முதலில் போன பணம்போனது தான் ! )


 வழிமுறை 1

 உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்

 MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்துகீல்

 இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .

 பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

 அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply

 செய்தால்உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்

 நீக்கப்படும்.



வழிமுறை 2

 ’STOP’’என்று type செய்து 121 க்கு மெசெஜ் அனுப்பவும்.

 பின்பு 121 லிருந்து பதில் மெசெஜ்யில் எந்தெந்தஎக்ஷ்ரா சர்வீஸ் உள்ளது

 என காட்டும் ,தேவையில்லாத சர்வீசைஉரிய எண்ணை தெர்ந்தெடுத்து
   
  பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.


மொபைல் மெயின் பேலன்ஸ் பார்க்க;

உங்கள் மொபைலில் *123# டயல் செய்க


 மொபைல் இன்டர்னெட் பேலன்ஸ் பார்க்க (2G);

 உங்கள் மொபைலில்*123*10# டயல் செய்க


 மொபைல் ரீசார்ஜ் ப்பர்பார்க்க;

உங்கள் மொபைலில்*121*11# அல்லது 121312.


 வாடிக்கையாளர்சேவை (கஸ்டமர்கேர்நம்பர் ;

 198டயல் செய்க.


 கடைசி 5 பரிவர்தனைக்கு எடுத்த தொகை அறிய;

நமது மொபைலில் லம்பா லவட்டி இருந்தார்கள் எனில் அதனை அறிய,

 உங்கள் மொபைலில் ‘’LAST’’ என்று டைப் செய்து 121 க்கு மெசெஜ் அனுப்ப

 பதில் சில நிமிடங்களில் வரும்.


தேவையில்லாமல்(RingTone,Hello Tone,Ringback

 Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala service) 
போன்ற

 உங்கள்மொபைலில்இருந்துபணம்எடுக்காமல்

 இருக்கவழிமுறைகள் ;

முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் மெயின் பேலன்ஸ் முழுவதையும் 

 பேசிகாலி பன்னி தீர்த்து விடுங்கள்பின் ரீசார்ஜ் கடையில்RC111 அல்லது

நிபந்தனையுள்ளகாலவரையில்மட்டும்(30days,20day,7day)பேச 

கூடிய மதிப்பிற்குரியவகையில் ரீசார்ஜ் செய்யவும்இது தனிகணக்கில் 

 வரவு வைக்க படும்.இதில் இருந்து நீங்கள் பேசுவதற்கும், SMS

 அனுப்புவதற்கும் மட்டுமே இதில் பணம் கழிக்க படும்.

தேவையில்லாத வேற எந்த சர்வீஸ் பயன்பாட்டிற்கும் இதில் இருந்து

அவர்களால் பணம் பிடுங்க முடியாது.


பின்குறிப்பு:

 இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் உங்கள் மெயின் கணக்கில் போதிய

பேலன்ஸ் இல்லாத காரணத்தால் தினம்தினம் செய்யும்முதல் அழைப்புக்கு 

 தேய்ந்து போன பழைய குரல் ஒன்று மெயின் கணக்கை ரீசார்ச் செய்யுமாறு

கழுத்தருக்கும் .பின் அடுத்த காலுக்கு தடையில்லாமல் போகும்.


 மிக முக்கிய குறிப்பு:

இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் அவசர தேவைக்கு

 அல்லதுசந்தேகத்திற்கு விளக்கம் கேக்க AIRTEL வாடிக்கையாளர்

சேவைக்கு பிரிவுக்கு அழைப்பு விடுத்தால் பேச முடியாது.

ஏனெனில் வாடிக்கையாளர் பகுதிக்கு காசு வசூல் செய்து கல்லா கட்டுகிறது 



 பணத்தை மீட்க வழிமுறை:


உங்கள் ஆதரவு இல்லாமல் ஏதாவது ஒரு சர்வீஸ் மூலம்(RingTone,Hello
Tone,Ringback Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala Service)

 உண்மையாக,உங்கள் அனுமதியில்லாமல் பணம் திருடியிருந்தால்

 வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைப்பு விடுத்து உங்கள் பிரச்சினை

 குறித்து கூறுங்கள்.


முன்குறிப்பு:

வெடிகுண்டு முருகேசன் ‘’ படத்தில் வரும் வடிவேல் போல் முறையா , 

 நல்லா முறையா என்ற பாணியில் சேவை பிரிவில் பேசுவது

 முதல்,முடியும் வரை சினம் (கோபம்கொண்டேபேசுங்கள் .தேவைக்குயேப்ப

 சவுண்டு வால்யூம் ஏற்றிஇறக்கி கொள்வதுமுக்கியம்.இதற்க்கு முன்

 இதுபோல் மொபைலில் இருந்து திருடப்பட்ட ஹிஸ்டரியை(உதாரணத்தை)

 கூறியும் இபொழுது தேவையில்லாமல் எடுத்த பேலன்ஸ் தொகையும் கூறி

சவுண்டு விடுங்கள்உடனே எடுத்தபணத்தை மெயின் கணக்கில்

சேர்க்கும்மாரு உறுதியுடன் கேளுங்கள்முடிந்தால் அவர்களின்உயர்

அதிகாரிக்கு இணைப்பு ஏற்படுத சொல்லி அதே முனைப்புடன் வாதாடி

பணத்தை திரும்ப பொறுங்கள்.

இதற்கு உங்கள் பேச்சு திறமை மிக,மிக,மிக அவசியம்