Monday 20 July 2015

பூமியின் படம்

பூமியின் உண்மையான படம் இது.எந்தவித மாற்றமும் செய்யாதது.இதில் தெரியும் கண்டம் ஆஸ்திரேலியா ஆகும். அதுவும் பாலைவனம்  தெளிவாக தெரிகிறது.

கைத்தொழில் பயிற்சி

தென்னம் ஓலையில்  காற்றாடி,தடுக்கு மற்றும் கூட்டுவான் (விளக்குமாறு )செய்வது  எப்படி  என்று மாணவர்களுக்கு கற்றுதந்தபின் (20.07.2015) மாணவர்களின் கைவண்ணம் .











Wednesday 8 July 2015

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்

       ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைக் கேட்டு வாசகர்களிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதற்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் துணை இயக்குநர் எம்.கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம். 
 
                   ஐ.ஏ.எஸ். தேர்வில் விருப்பப் பாடமாக இயற்பியலை எடுக்கலாமா என ஒரு வாசகர் கேட்டுள்ளார். ஐ.ஐ.டி. போன்ற உயர்தர பொறியியல் கல்வி பயின்ற மாணவர்கள் அதிக அளவில் இயற்பியலை விருப்பப் பாடமாகக் கடந்த காலங்களில் தேர்ந்தெடுத்த காரணத்தால் இயற்பியல் பாடத் திட்டம் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) சற்று கடினமாக்கப்பட்டது.
அதனால் அந்தப்
பாடம் சற்று கடினமாகவே இருக்கும்.
அரசியல் விஞ்ஞானம், பொது நிர்வாகம்,
வரலாறு, புவியியல், சமூகவியல்,
உளவியல் போன்ற அனைத்து விருப்பப்
பாடங்களும் தேர்வுக்கான
தயாரிப்புக்குச் சற்று எளிமையாக
இருக்கும்.
பல்கலைக்கழகங்கள் வழங்கும் முதுநிலை
பட்டப்படிப்புகளில் மேற்கண்ட பாடப்
பிரிவுகளில் தமிழ்வழி புத்தகங்கள்
கிடைக்கின்றன. அவற்றை நாம்
தேர்வுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஐ.ஏ.எஸ் தேர்வு ஒன்றே குறிக்கோளாக
இருக்கும் நிலையில் நீங்கள் மேற்கண்ட
பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றை
இளங்கலை பாடப்பிரிவாகத்
தேர்ந்தெடுக்கலாம்.
ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு ஆங்கில அறிவு
அதிகம் தேவையா என்கிறார் ஒரு
வாசகர். Language Paper-ல் முதனிலைத்
தேர்வில் (PRELIMINARY EXAM)
கேள்விகளைப் படித்து
விடையளிக்கும் அளவுக்கு ஆங்கில
அறிவு இருந்தால் போதுமானது.
பிரதானத் தேர்வில் (MAIN EXAM)
கேள்விகள் ஆங்கிலத்தில் இருந்தாலும்
அதைப் புரிந்துகொண்டு தமிழ்
வழியில் விடையளிக்கலாம்.
இதற்குப் பிரதானத் தேர்வுக்கு
விண்ணப்பிக்கும் போது தமிழ்வழித்
தேர்வைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி
வெற்றி பெற்றவர்களையும்
தொடர்புகொண்டு தக்க ஆலோசனை
பெறலாம்.
ஐ.ஏ.எஸ். பாடத்திட்டம், தேர்வு முறை
தொடர்பான தகவல்களுக்கு
www.upsc.gov.in என்ற இணையதளத்தில்
தகவல்கள் உள்ளன. தமிழக அரசு நடத்தும்
இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சியில் சேர்ந்து
பயிற்சி பெற www.civilservicecoaching.com
என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகங்களில் இயங்கும் தன்னார்வப்
பயிலும் வட்டங்கள் (Study Circle)
மூலமாகவும் இதற்கான வழிகாட்டுதல்
வழங்கப்படுகிறது.

Tuesday 7 July 2015

பார்வை


இன்று(07.07.15) வட்டார வளமைய மேற்பார்வையாளர் திரு கருணாமூர்த்தி அவர்கள் வருகைபுரிந்து   மாணவர்களின்    கற்றல்  திறனை பரிசோதித்தார்கள் .தக்க ஆலோசனைகள் வழங்கினார் .உடன்  கணக்காளர் திரு ஸ்ரீதர்  அவர்களும் வருகை தந்தார்கள்.


நேற்று(06.07.15) உ .தொ .கல்வி அலுவலர் திரு  பாலசுப்ரமணியன் அவர்கள் வருகைபுரிந்தார்கள்.அவர்களும் மாணவர்களின்  வாசிப்புத்திறன்  எழுதுதல் திறனை பரிசோதித்தார்கள் . மிக்க திருப்தி அடைந்தார்கள் .

Monday 6 July 2015

குட்டி கதை

கோபம்… வேண்டாமே.. குட்டி கதை !!

     மனிதனுக்கு அதிகமா கோபம் வருதால் எந்த நற்பயணும் இருக்காது என்பதற்க்கு இந்த சிந்தணை கதை ஒரு எடுத்துக்காட்டு..

        ஒரு இளைஞன் இருந்தான் அவனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது. கோபம் வரும்போது அவன் கத்தி தீர்த்து விடுவான் மேலும் அவன் இயல்பு தன்மைக்கு மாறாக நடந்து கொள்கிறான்.

      ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.”இனி மேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.

முதல் நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான். இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார். 45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.

“உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்? உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா? அந்த இளைஞன் வெட்கித் தலை குணிந்தான்.

பிறரை காயப்படுத்துவதை நிறுத்தினால் வாழ்க்கை புதிய அத்தியாயம் பெறும்.

Friday 3 July 2015

செல்வபிரவீன் பற்றிய பதிவு


கடந்த  புதன்கிழமையன்று 01.07.2015)அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மாற்றுத்திறன் பெற்றோர்களின்  கல்வி  முறை பற்றி அறிவதற்காக  சிறப்பு குழு  வருகை புரிந்து  வீடியோவில் பதிவுசெய்தனர் .ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்  செல்வபிரவீன்  பற்றிய பதிவு அது.அனைத்து சிறப்பு ஆசிரியர்களும்  வருகை புரிந்தனர்.திரு  கண்ணன் தலைமையில் சிறப்பு குழுவினர் உடன் வந்தனர்.