Saturday 10 December 2016

முதலமைச்சர்கள் பட்டியல்

1920-ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடந்தது ! தமிழக முதலமைச்சர்களை 'Premier’ என்றும் 'பிரதம மந்திரி’ என்று அழைக்கப்பட்டனர் அன்று முதல் இன்று வரை தமிழக முதலமைச்சர்களாக இருந்தவர்களின் தொகுப்பு இங்கே:-

17.12.1920 முதல் ஆகஸ்ட் 1921 வரை -  அகரம் சுப்பராயலு ரெட்டியார்

தமிழகத்தில் 'நீதிக் கட்சி’ என்ற 'ஜஸ்டிஸ் பார்ட்டியைச் சேர்ந்த கடலூரைச் சேர்ந்தவரும் பிரபல வழக்கறிஞருமான 'திவான் பகதூர்அகரம் சுப்பராயலு ரெட்டியார், 1920-ம் ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி தமிழக சட்டசபைக்கு முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

உடல்நிலை காரணமாக 1921-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தமது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் .

17.12.1921 முதல் 3.12.1926 வரை - பனகல் ராஜா

'பனகல் ராஜாவின் முழுப் பெயர் 'ராஜாராமராயநிங்கர்’, உடல்நிலை காரணமாகத் தமது பதவியை இடையிலேயே ராஜினாமா செய்துவிட்டுச் சென்றார்!

4.12.1926 முதல் 27.10.1930 வரை - டாக்டர் பி.சுப்பராயன்

1926-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 'சுயராஜ்யக் கட்சியினரால் (காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவு) கவரப்பட்ட 'நீதிக் கட்சியின் ஆதரவில் இருந்த டாக்டர் பி.சுப்பராயன், 'Premier’ஆனார். 1930-ம் ஆண்டு அக்டோபர் 27-ல் பதவியில் இருந்து விலகினார்!

27.10.1930 முதல் 4.11.1932 வரை - 'பொலினி  முனுசாமி நாயுடு

'இவர் கொண்டுவந்த தீர்மானத்தினால்கட்சிக்குள் அபிப்ராய பேதங்கள் வலுத்தன. இதனால் 'பொலினி’ முனுசாமி நாயுடு அதன் பிறகும் முதலமைச்சராகப் பதவி வகிப்பது இழுக்கு என்று கருதி ராஜினாமா செய்தார்!

5.11.1932 முதல் 4.4.1936 மற்றும் 25.8.1936 முதல் 31.3.1937 வரை - பொப்பிலி ராஜா.

நீதிக் கட்சியைச் சேர்ந்த இவர்,சுமார் மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிறகுதிடீரென உடல்நலமின்றிப் போய்விட்டது.சிகிச்சைகள் முடிந்து 1936 ஆகஸ்ட் 25-ல் மீண்டும் பிரீமியராகப் பதவிக்கு வந்தவர்ஏழு மாதங்கள் கழித்து அவராகவே விலகிவிட்டார்!

4.4.1936 முதல் 24.8.1936 வரை - பி.டி. இராஜன்

'பொன்னம்பல தியாகராஜன்’ என்பது முழுப் பெயர். பொப்பிலி ராஜாவிடுப்பில் சென்ற காலத்தில்இவர் பிரீமியராகப் பதவியில் இருந்தார்!

1.4.1937 முதல் 15.7.1937 வரை - கே.வி.ரெட்டி

1937-ம் ஆண்டு மார்ச்சில் நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில் சுயராஜ்யக் கட்சி அதிக இடங்களைப் பெற்று வெற்றி அடைந்தது.

15.7.1937 முதல் 29.10.1939 வரை - ராஜாஜி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களின் ஆலோசனைப்படி,சென்னை சட்டசபைக்கு பிரீமியராக சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் என்ற முழுப் பெயருடைய ராஜாஜி 1937-ம் ஆண்டு பதவி ஏற்றார். சுமார் இரண்டு ஆண்டுகள் வரை பிரீமியராக இருந்தார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் காரணமாகபிரிட்டிஷாருக்கும் மகாத்மா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு முற்றியது. காந்திஜி, 'எல்லா மாகாண சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சியில் பதவியில் இருப்பவர்கள் மற்றும் டெல்லி சட்டசபையில் உள்ளவர்கள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு,பிரிட்டிஷ் ஆட்சியாளருக்கு எதிராகத் தனி நபர் சத்யாகிரகத்தில் ஈடுபட வேண்டும்’ என அறிக்கை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து,ராஜாஜி தமது பதவியை ராஜினாமா செய்தார்!

இரண்டாவது உலக மகா யுத்தம்... பிரிட்டிஷார் நாடெங்கும் 'அவசர நிலைபிறப்பித்து இருந்தனர்.

1939 நவம்பர் முதல் 1946 ஏப்ரல் வரை நாடெங்கும் எந்தத் தேர்தல்களும் நடைபெறவில்லை. இந்தக் காலத்தில் தமிழகத்தில் பிரீமியர் யாரும் இல்லை!

30.4.1946 முதல் 23.3.1947 வரை - டி.பிரகாசம்

அடுத்து 1946-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் பிரபலமானவருமான டி.பிரகாசம் சட்டசபைக்கு பிரீமியராகப் பதவி ஏற்றார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே டி.பிரகாசம் மந்திரி சபை மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வந்து  சட்டசபையில் வாக்கெடுப்பில் அது நிறைவேற்றப்பட்டது. டி.பிரகாசம் தலைமையிலான அமைச்சரவை கவிழ்ந்தது!

23.3.1947 முதல் 6.4.1949 வரை - ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார்

டி.பிரகாசம் மந்திரிசபை கலைக்கப்பட்ட அதே தினம் பிற்பகல்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் சட்டசபைக்குப் புதிய முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திரம் அடைந்த திருநாளை சென்னை ஜார்ஜ் கோட்டையில் கொண்டாடியது.

7.4.1949 முதல் 7.4.1952 வரை - பி.எஸ்.குமாரசாமிராஜா

'இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும்’ அமலுக்கு வந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலாகப் பொதுத் தேர்தல் நடக்க இருக்கவேபி.எஸ்.குமாரசாமி ராஜா பதவியில் இருந்து விலகினார்!

12.4.1952 முதல் 13.4.1954 வரை - சி.ராஜகோபாலாச்சாரியார் (எ) ராஜாஜி இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

1953-ம் ஆண்டு இறுதியில் ராஜாஜி அவர்கள் கொண்டுவந்த 'புதிய கல்வித் திட்டத்தைச் சட்டசபையில் பலர் எதிர்த்தனர். ''இந்தத் திட்டம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால்நான் இங்கு முதலமைச்சராகப் பதவியில் இருப்பதும் நியாயம் இல்லை!'' எனக் கூறி ராஜாஜி தம் பதவியை ராஜினாமா செய்தார்!

13.4.1954 முதல் 12.4.1957, 13.4.1957 முதல் 14.3.1962, 15.3.1962 முதல்1.10.1963 வரை - கு.காமராஜர்

ராஜாஜி அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியதுமே,காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு மிகுந்த, 'பெருந்தலைவர்’ என எல்லோராலும் அழைக்கப்பட்ட கு.காமராஜர்அடுத்த முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஆண்டுகள் முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.

1962-ம் ஆண்டு மூன்றாம் முறையாகவும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை மேலும் பலப்படுத்தும் வேலையில் இறங்குவதற்காகப் பாரதப் பிரதமரின் விருப்பப்படி 1963-ம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்!

2.10.1963 முதல் 5.3.1967 வரை - எம்.பக்தவத்சலம்

காமராஜர் விலகியதுமேஅதே அமைச்சரவையில் இருந்து எம்.பக்தவத்சலம் பதவியேற்றார். இவரது ஆட்சியில் அரசியல் இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடர்ந்தன.

1967-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாட்டில் சட்டசபைக்கான பொதுத் தேர்தலில்காங்கிரஸ் கட்சிக்கு எதிரான - வலுவான கூட்டணி யும் ஏற்பட்டது.

அந்தச் சமயம்வலுவான அமைப்பில் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் குதித்துஅதில் அறுதிப் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது.

1967-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியோடு தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர்!

6.3.1967 முதல் 3.2.1969 வரை - சி.என்.அண்ணாதுரை

அண்ணா என்று அழைக்கப்பட்ட அண்ணாதுரை இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே முதல்வராக இருந்தார். 1968-ல் அவரது உடல்நலன் பாதிப்படைந்தது. அமெரிக்க நாட்டில் சிகிச்சை பெற்றுசென்னை திரும்பிய அவர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ல் காலமானார்!

இவர்களைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் அமைச்சர் நாற்காலியில் அமர்ந்தவர்கள்.
மு. கருணாநிதி
10.2.1969 முதல் 5.1.1971 வரை
15.3.1971 முதல் 31.1.1976 வரை,
27.1.1989 முதல் 30.1.1991 வரை
13.5.1996 முதல் 14.5.2001 வரை
13.5.2006 முதல் இப்போது வரை

எம்.ஜி.ராமச்சந்திரன்
30.3.1977 முதல் 17.12.1980 வரை
9.6.1980 முதல் 15.11.1984 வரை,
10.2.1985 முதல் 24.12.1987 வரை.

ஜானகி ராமச்சந்திரன் - 7.1.1988 முதல்30.1.1988 வரை

ஜெ.ஜெயலலிதா

24.6.1991     முதல்    13.5.1996 வரை
14.5.2001    முதல்     21.9.2001 வரை
2.3.2002      முதல்     13.5.2006 வரை


16.05. 2011   முதல்   27.09.2014வரை
23.05. 2015   முதல்   22.05.2016 வரை


23.05. 2016   முதல்   05.12.2016 வரை

ஓ.பன்னீர்செல்வம் -
21.09.2001  முதல் 01.3.2002   வரை.
27.09.2014  முதல் 22.05.2015 வரை.
06.12. 2016 முதல் ...............................  



Friday 9 December 2016

அரும்புகளின் அஞ்சலி

அம்மா அவர்களுக்கு அரும்புகளின் அஞ்சலி 






Tuesday 6 December 2016

கண்ணீர் அஞ்சலி

தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி பேரிடியாய் தமிழக மக்களுக்கு அமைந்துள்ளது.மீளாத்துயில் கொள்ளும் அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறையருள் துணை செய்யட்டும்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எங்கள் பள்ளியின் சார்பாக ஆழ்ந்த இரங்கல்கள் .


தமிழக முதல்வர்

ஜெயலலிதா தமிழக முதல்வராக கீழ்காணும் காலங்களில் பணியாற்றியிருக்கிறார்.
முதல்வரைதேர்தல்குறிப்பு
ஜூன் 24, 1991மே 11, 19961991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 11வது முதல்வர்
மே 14, 2001செப்டம்பர் 21, 2001தேர்தலில் போட்டியிடாமல் முதல்வராக பதவி வகித்தார்இப்பதவி முடக்கப்பட்டது
மார்ச் 2, 2002மே 12, 20062001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 14வது முதல்வர்
மே 16, 2011செப்டம்பர் 27, 20142011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 16வது முதல்வர் (இப்பதவி முடக்கப்பட்டது)
மே 23, 2015மே 22, 20162015 ஆர். கே. நகர் இடைத்தேர்தல்தமிழகத்தின் 18வது முதல்வர்
மே 23, 2016டிசம்பர் 5, 20162016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்தமிழகத்தின் 19வது முதல்வர்