நகைச்சுவை


மூன்று பேர்
மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”
கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”
மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”

கடி ஜோக்ஸ்
இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா?
 என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது

 நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?

நான் கோடு போட்டா நீ ரோடு போடுவே. நான் புள்ளி வெச்சா நீ கோலம் போடுவே.நான் மிஸ்டுகால் கொடுத்தா மட்டும் நீ ஏண்டா திரும்ப கூப்பிட மாட்டேங்கிறே?

வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே!

கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா?

பல் வலின்னு வரவங்களோட பல்ல டாக்டர் புடுங்கலாம் ஆனா..கண் வலின்னு வரவங்களோட கண்ண டாக்டர் புடுங்கலாமா?

பாம்பாட்டி பாம்பைக் காட்டி பொழப்பு நடத்றான். குரங்காட்டி வித்தை காட்டி பொழப்பு நடத்றான். நீ மட்டும் எப்படி பல்லைக் காட்டியே பொழப்பை ஓட்டறே?

ஜுர மாத்திரை சாப்பிட்டா ஜுரம் போயிடுது, தலைவலி மாத்திரையால தலைவலி போயிடுது, ஆனா, தூக்க மாத்திரை சாப்பிட்டா ஏன் தூக்கம் போகமாட்டங்குது?
புள்ளி மான் உடம்பு முழுக்க புள்ளி இருக்கும்.. ஆனா கண்ணு குட்டி உடம்பு முழுக்க கண்ணு இருக்குமா?
ஆடினாதான் மயிலு, பாடினாதான் குயிலு, ஓடினாதான் ரெயிலு, உள்ளப்போனா ஜெயிலு, வெளியில வர பெயிலு... எஸ்.எம்.எஸ். அனுப்புனாதான் 'மொபைலு'

ஓட்டல்ல காசுக் கொடுக்கலன்னா மாவாட்டச் சொல்வாங்க ... ஆனா பஸ்ல காசுக் கொடுக்கலன்னா... பஸ் ஓட்டச்சொல்வாங்களா?

விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா ... விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா வலிக்காது

அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

மண்டையில போடுறது DYE... மண்டைய போட்டா DIE...!!

தண்ணியில கப்பல் போனா ஜாலி .... கப்பலுக்குள்ள தண்ணி போனா நீ காலி!!!

இலவசம் என்றால் என் கணவர் எதையும் விட மாட்டார்... அப்படியா?.. ஆமாம்! இப்பப் பாரேன்... இலவச திருமணம் செய்துக்கிட்டு வந்திருக்கிறார்..
.
ரசம் vs விஷம் :ஏன் கபாலி உன் பொண்டாட்டிய விஷம் வச்சி கொல்லப் பார்த்த?... என்னை ரசம் வச்சி கொல்ல பார்க்குறா எஜமான், அதான்.
பதற்றம் VS நடுக்கம் :காதலி மாசமாய் இருப்பது தெரிய வரும்போது வருவது பதற்றம். காதலி மாசமாய் இருப்பது மனைவிக்கு தெரிய வரும்போது வருவது நடுக்கம் ...

கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன். அப்புறம்?... ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி... இப்ப?.... இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்கிறது ...

ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?.... வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!

வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.

நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... பெண் அவ்வளவு அழகா? இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..

என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது...


v நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள். நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!

யோவ்...டிரைவர் வண்டிய மெதுவா ஒட்டுயா, பயமா இருக்கு..... உனக்காக மெதுவா போக முடியாது, பயமா இருந்தா என்னை மாதிரி கண்ணை மூடிக்கோ.

கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?

என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!! உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...

இந்த சேலை கட்டியிருக்கும் போது நீ மகாலட்சுமி மாதிரியே இருக்க...யாருங்க அந்த மகாலட்சுமி ?.... எங்க ஆபிஸ் டைப்பிஸ்ட்...!

என்னங்க... உங்க சட்டையெல்லாம் எண்ணையா இருக்கு...? (கணவன்): ஆபிஸில தலைவலின்னு டைப்பிஸ்ட் என் மேலே கொஞ்சம் சாய்ந்திருந்தாள்.

உன் போட்டோவா இது...எனக்கே சந்தேகமா இருக்கு... (மனைவி): என் மேலே இருக்கிற சந்தேகம் எப்பதான் உங்களுக்குத் தீரப் போகுதோ...

வீழ்வதில் வெட்கப் படாதே! வீழ்ந்து எழுவதில் தான் வெற்றி காண்பாய்! ...... இப்படி எல்லாம் சொல்லி வீழ்தவன் மனச நேகடிக்காதிங்க!!
"சினிமா பாட்டுதான்" "சரி எந்த படத்துல இருந்து?" "சினிமா படத்துல இருந்துதான்" "அய்யோ!" THE END!!

: "வணக்கம் எத்தனை தடவை சொல்றது?" "அதில்லைங்க" "எது இல்லை?" "சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க?" "போன்ல இருந்துதான் பேசறேன்" "சரி என்ன ...
 PART1: வானொலியில் தொலைபேசி வழி நேயர் விருப்பத்தில் ஒரு உரையாடல்..... "ஹலோ வணக்கம்!" "வணக்கம்! சொல்லுங்க..." "வணக்கம்தான் சொல்லிட்டேனே”!!!

உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்

என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய். வீட்டில் இன்னொரு ஜோடியும் இருக்கிறது

இதென்ன அரசே போரே நிகழாத போது தங்களுக்கு விழுப்புண்ணா ? இல்லை அமைச்சரே! அரியாடனத்திலே தடுக்கிக் கீழே விழுந்ததால் ஏற்ப்பட்ட புண்... அதனால் ...

கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?.... இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.

v இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. .. நீங்க கேட்டீங்களா? ... நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க...

v இதுவரை எத்தனை இலையான் அடித்தாய்?..மூன்று, இரண்டு ஆண். ஒன்று பெண்.ஆண், பெண் என்று எப்படிக் கண்டு பிடித்தாய்? பியர் போத்தலின் மேல் இரண்டு ...

v கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன், உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.

v நாம ஓடீப்போயிடலாமா ... செருப்பு பிஞ்சுடும் ... பரவாயில்லை போகும்போது தச்சுக்கலாம்

v "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற கொள்கையோட ஒரு கட்சி ஆரம்பிச்சீங்களே இப்பொ எப்படி இருக்கு? அதில் ஒரே தலைவர் ஒரே உறுப்பினர்னு ஆயிடுச்சு.

v கோடிக்கோடியா சம்பாதிக்க வழின்னு ஒரு புத்தகம் எழுதினீங்களே, அது என்னாச்சு? அது என்னைத்தெருக்கோடிலே கொண்டு நிறுத்திடிச்சு.

v காதுல ரயில் ஓடற மாதிரி சத்தம் கேட்குது. (செக் பண்ணிவிட்டு டாக்டர்) எனக்கு ஒன்னும் கேட்கலையே? அப்படியா! அப்போ ஏதாவது சிக்னல்ல நின்னிருக்குமோ!

v மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்.

v எனக்கு பொழுதே போகமாட்டேங்குது ஸார்... ஏதாவது சினிமாவுக்குப் போகிறதுதானே? ..ஆபீஸ்லே அதுக்கெல்லாம் பெர்மிஷன் கொடுக்க மாட்டாங்களே!

v இந்தாங்க, டானிக், தினம் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க... சிள்வர் ஸ்பூன், பிலாஸ்ரிக் ஸ்பூன் எல்லாம் சாப்பிட்டு பழக்கம் இல்ல டாக்டர்

v படத்துக்கு ஏன் “வாக்கின் இண்டர்வியூ” ன்னு தலைப்பு வைச்சாங்க? அப்பதான் இளைஞர்கள்லாம் அடிச்சுப் பிடிச்சு ஓடி வருவாங்க என்றுதான்

v டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

v இந்தக் காட்சில நீங்க 100 அடி உயரத்துல இருந்து நீச்சல் குளத்துல குதிக்கணும். எனக்கு நீச்சல் தெரியாதே. கவலைப்படாதீங்க. குளத்துல தண்ணியே இர ...

v வீட்டுக்கு ஒரு குதிரை இலவசம்னு சொல்லிட்டீங்க, கட்டுப்படியாகாது மன்னா!! வீட்டுக்கு ஒரு குதிரை லட்சியம். ஆனா, ஒரு கழுதை நிச்சயம்னு அறிக்கை ...

v மனைவியை அடிப்பவர்களுக்கு ஒரு வருட சிறை தண்டனை என்று அறிவித்து விடலாமா அரசே?.... வேண்டாம் அவ்வளவு தைரியமானவர்களை நம் படையில் சேர்த்துக்கொ ...

 மன்னா ! நீங்கள் அப்பா ஆகிவிட்டீர்கள் ! பலே! பலே! எந்த பெண் அம்மா ஆகியிருகிறாள் ?
v என்ன ! மன்னா அ.அ.அ. போ. வா ? ஆமா, அம்சவல்லியை அழைத்துக் கொண்டு அந்தபுரம் போய்விட்டார் !.

v போடா பண்ணி! என்ன வில்லத்தனம்................ ஆகா.......... அவனா நீ! வந்துட்டாண்டா வந்துட்டாண்டாஆஆ!!!

v ஹலோ............. டுபாய்யா...? என்னுடைய பிரதர் மார்க் இருக்காறாரா.....? ஏய் நீதான் பேசுறையா..... ஹௌ ஆர் யூ ????

v எனக்கெல்லாம் ரிஸ்க் எடுக்குறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி !

v அந்த கட்டதுறைக்கு கட்டம் சரியில ......... நம்மகூட விளையாடுறதே வேலையா போச்சு ........

v தூங்கப் போறதுக்கு முன்னாடி குட்நைட் சொல்லலாம்.... எழுந்துக்கறதுக்கு முன்னாடி குட்மார்னிங் சொல்ல முடியுமா?

v யூ பார் மிஸ்டேக்..... மீ தேவா நம்பர்...... மை பேமிலி டோட்டல் டேமேஜ், 'ஐ சீ ஜஸ்ட் பார் ஜட்டி'

v நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?

v ஏன் உங்க டைரக்டர் இப்பல்லாம் ’மசாலா’ படங்கள் எடுக்கறதில்லே? வெங்காய விலை குறையட்டும்னு காத்திருக்கார்.

v எத்தனபேர்ரு...? ஒருத்தனா...!?! உயிர் இருகனுமா? போகனுமா? இருந்தும் இல்லாம இருக்கானுமா...? இல்ல... இல்லாம இருக்கிறமாதிரி இருக்கனுமா...?

v இல்ல... றேண்டுமே இல்லாமா....? டேய்... எறும்புத் தோல உரிக்கிறதுக்கு காண்டாமிருகமா... !?!

v பால் வியாபாரம் ஆரம்பிச்சியே எப்படி போகிறது? மாட்டின் சொந்தகாரன் கண்ல மாட்டாதவரை நல்லாதான் போகுது!!

v அந்த அம்பயர் ஏன் ரசிகர்களோடு நின்னுதான் அம்பயரிங் பண்ணுவேன்னு அடம் பிடிக்கிறார்? அவரை விட ரசிகர்கள் கரெக்டா அவுட் கொடுக்கறாஙகளாம்.

v ஏன்டி திருடன இப்படி அடிக்கிற!?! ... அட இருட்டில நான், நீங்க தான் குடிச்சுட்டு வந்திருக்கீங்கன்னு நினைச்சுட்டன்!!!!

v கனவன்: அநாவசியமா! எனக்குள்ள தூங்கிகிட்டு இருக்கிற மிருகத்தை எழுப்பாத! தாங்க மாட்ட!. மனைவி: பூனைக்குட்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்!.

v காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...? காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.

v செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

v அவள் அவன்கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினாலே, இப்ப என்னாச்சு தெரியுமா?... என்னாச்சு?.. பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்.

v என் காதுக்குள்ள யாரோ பேசறாமாதிரி, அப்பறம் நிறைய சத்தங்கள்லாம் கேக்குது! அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லனும்ன்னு அவசியம் இல்லயிங்கா... ஓ.கே!

v கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ? இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!


முகம் வீங்கியது

ஒரு அம்மா முகமெல்லாம் வீங்கி போய் வந்தாங்க,”டாக்டர்,எங்க வீட்டுக்காரர் தினம் ஆபிஸில் இருந்து வந்தவுடனே என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்,இதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க டாக்டர்”.

டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும்.
ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க...
டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை.
டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம அமைதியா இருந்தா என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.”

 ஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...


ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.

அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.

முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னாங்க. சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாமுனு முதல் பையன எழுப்பி...........

"உன் பேர் சொல்லு.........."

"பழனி"

"உன் அப்பா பேரு.............."

"பழனியப்பா"

அடுத்தப் பையன எழுப்பி..........

"உன் பேர் சொல்லு.........."

"மாரி"

"உன் அப்பா பேரு.............."

"மாரியப்பா"

அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........

"உன் பேர் சொல்லு.........."

"பிச்சை"

"உன் அப்பா பேரு.............."

"பிச்சையப்பா"

இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு. சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப் பையன எழுப்பினாரு.

"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)

"ஜான்"

"இப்பொ உன் பேரைச் சொல்லு......."

"ஜான்சன்"

அப்புறம் என்ன அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.............

நன்றி   வேடந்தாங்கல் 
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;


கணவர்கள் விற்கப்படும்

 இங்கு கணவர்கள் விற்கப்படும் !!?


ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.

அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."ப‌ச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"

முதல் தளத்துல அறிக்கை பலகைல,

"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருநது

நன்றி: முகநூல்.

No comments: