முகம் வீங்கியது
ஒரு அம்மா முகமெல்லாம் வீங்கி போய் வந்தாங்க,”டாக்டர்,எங்க வீட்டுக்காரர் தினம் ஆபிஸில் இருந்து வந்தவுடனே என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்,இதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க டாக்டர்”.
டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும்.
ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க...
டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை.
டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம அமைதியா இருந்தா என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.”
டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும்.
ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க...
டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை.
டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம அமைதியா இருந்தா என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.”
ஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னாங்க. சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாமுனு முதல் பையன எழுப்பி...........
"உன் பேர் சொல்லு.........."
"பழனி"
"உன் அப்பா பேரு.............."
"பழனியப்பா"
அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு.........."
"மாரி"
"உன் அப்பா பேரு.............."
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது. இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி..........
"உன் பேர் சொல்லு.........."
"பிச்சை"
"உன் அப்பா பேரு.............."
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு. சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு. அடுத்தப் பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு...." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு......."
"ஜான்சன்"
அப்புறம் என்ன அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.............
நன்றி வேடந்தாங்கல்
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
கணவர்கள் விற்கப்படும்
இங்கு கணவர்கள் விற்கப்படும் !!?
ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.
அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..
அது என்னன்னா...!
1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும் இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும். ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..அப்டியே வெளிய தான் போக முடியும்.
இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."பச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது"
முதல் தளத்துல அறிக்கை பலகைல,
"முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு
இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா
இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு
இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.
மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு
அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும், "ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ" அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.
நாலாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள் ..வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.
இதை விட வேற என்ன வேணும்... நல்ல குடும்பம் அமைக்கலாமே?
கடவுளே... மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும். அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.
ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.
அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ... சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே.. அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது... சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..
ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல,
"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது .. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான்
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...
பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருநது
நன்றி: முகநூல்.
No comments:
Post a Comment