Tuesday 24 November 2015

பாரதிதாசனின் கவிதையில் ஒரு துளி

கனியிடை ஏறிய சுளையும்

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும்
பாகிடை ஏறிய சுவையும்;;
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் - ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும்
விழைகுவ னேனும், தமிழும் - நானும்
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம்
பக்கத் துறவின் முறையார்
தயைமிகு உடையாள் அன்னை - என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை,
குயில் போற் பேசிடும் மனையாள் - அன்பைக்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம் - தமிழ்என்
அறிவினில் உறைதல் கண்டீர்!

நிலச்சுடர் மணி வானம் - ஆங்கே
நிறையக் குளிர் வெண் ணிலவாம்,
காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே
கடல் மேல் எல்லாம் ஒளியாம்,
மாலைச் சுடரினில் மூழ்கும் - நல்ல
மலைகளின் இன்பக் காட்சி,
மேலென எழுதும் கவிஞர் - தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?

செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்
தன்னிகர் தானியம் முதிரை - கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ் செய் கிழங்கு - காணில்
நாவிலி னித்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே!

Thursday 19 November 2015

பார்வை

18.11.2015 புதன்கிழமை  எங்களது உதவி தொடக்கக்கல்வி  அலுவலர்
திரு ஆர் .பாலசுப்ரமணியன்   அவர்கள்   பள்ளியை பார்வையிட்டார்கள்.அப்போது  பழைய பள்ளி கட்டிடம்  இடிக்கப்பட்டு வருவதை  நேரில் ஆய்வு செய்தார்கள் .




Wednesday 11 November 2015

தீபாவளி 2015

எங்கள் பள்ளி குழந்தைகளின் தீபாவளி  வர்ணஜால புத்தாடைகள்
மத்தாப்பாய்  மலரும் புன்னகையுடன்

Monday 9 November 2015

பள்ளி கட்டிடம் இடிப்பு

எங்களது  கனவாக இருந்த பழைய ஓட்டுகட்டிடம் (60 வயதான பள்ளி கட்டிடம் ) தற்சமயம் இடிக்கப்பட்டு வருகிறது. நாங்கள் நிம்மதியாக உள்ளோம்,