Tuesday 28 February 2017

 தாராபாரதியின்  கவித்துளி 

வெறுங்கை என்பது மூடத்தனம் - உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன்
கைகளில் பூமி சுழன்றுவரும்

மூலையில் கிடக்கும் வாலிபனே - தினம்
முதுகில் வேலையைத் தேடுகிறாய்
பாலை வனம்தான் வாழ்க்கையென - வெறும் 
பல்லவி எதற்குப் பாடுகிறாய்

விரக்தி எனும் சிலந்தி வலைக்குள்
வேங்கைப் புலிநீ தூங்குவதா? - நீ
இருட்டைக் கிழிக்கும் வெளிச்சகீற்று
எங்கே கிழக்கெனத் தேடுவதா?

விழி விழி உன் விழி நெருப்பு விழி - உன்
விழிமுன் சூரியன் சின்னப்பொறி!
எழுஎழு தோழா உன் எழுச்சி - இனி
இயற்கை மடியில் பெரும் புரட்சி

நீட்டிப் படுத்தால் உலக உருண்டையில்
நீதான் பூமத்திய ரேகை - நீ
போட்டுக்கொடுக்கும் நிகழ்ச்சி நிரல்தான்
பூமி வளம் வரும் புதுப்பாதை

கட்டை விரலை விடவும் இமயம்
குட்டை என்பதை எடுத்துச்சொல் - உன்
சுட்டு விரலின் நகமாய் வானம்
சுருங்கியதென்று முழக்கிச்சொல்

தோள்கள் உனது தொழிற்சாலை- நீ
தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை!
தோல்விகள் ஏதும் உனக்கில்லை - இனி
தொடுவானம்தான் உன் எல்லை

கால்நகம் கீறிய கோடுகள் வழியே
கங்கையும் சிந்துவும் ஓடிவரும் - உன்
தோள்களிரண்டும் தெற்கு வடக்காய்
துருவங்களுக்குப் பாலமிடும்!

மன்புழுவல்ல மானிடனே - உன்
மாவலிகாட்டு வானிடமே
விண்ணிலும் மண்ணிலும் விளைவுகளே - இவை
வேலைகளல்ல வேள்விகளே -


தேசிய அறிவியல் தினம்.   28.02.2017

பிப்ரவரி28. என்னநாள் தெரியுமா?
தேசிய அறிவியல் தினம்“.
அறிவியல் தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம் என்ன?
இது சர் சி.வி.ராமன் அவர்கள் தன் கண்டுபிடிப்பான (Raman Effect) ராமன் விளைவு கண்டுபிடித்த தினம்
இந்தக் கண்டுபிடிப்பு உலகளாவிய பெருமையை இந்தியாவிற்குப் பெற்று தந்தது. 
மேலும் உயரிய விருதான நோபல் பரிசும்(1930) இவருக்கு கிடைத்தது.
 இதில் நாம் பெருமை கொள்ளும் மற்றொரு செய்தி 
இவர் ஒரு தமிழர். ஊர் திருச்சிராப்பள்ளி. மேலும் சில விவரங்கள்:
முழுப்பெயர் : சந்திரசேகர வெங்கடராமன்பிறப்பு இறப்பு : நவம்பர்  7, 1888 – நவம்பர் 21, 1970


இந்திய வேளாண்மையின் மிகப்பெரும் பகுதி பருவமழையை மட்டுமே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. ஆகவே, மழைநீரின் சேகரிப்பும், பயன்பாடும் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது. மழைநீரின் ஆகப் பெரும்பான்மையான அளவு நீர் ஓடைகளாகவும் நதிகளாகவும் பெருக்கெடுத்தோடி கடைசியாகக் கடலில் சென்று சேர்ந்து விடுகிறது.
விலைமதிப்பற்ற நீர்த்திரவம் இவ்வாறாக நம்பமுடியாத அளவு மிகப்பெரும் அளவுகளில் நாட்டுக்குப் பயன்படாமல் போய் முடிகிறது. இது மாபெரும் தேசியப் பிரச்சினை. இந்த நதிகளின் நீர்வளங்களைக் கட்டுப்படுத்தி பயன்படுத்துவதன் மூலம், மிகப்பரந்த நிலப்பகுதிகளை வளம் செறிந்த பூமியாக மாற்ற முடியும். இதற்குத் தேவை தீரமிக்க, மிக நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கை மட்டுமே!”
இதை யார் சொல்லியிருப்பார் என உங்களால் ஊகிக்க முடியுமா?
1930-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன். ‘தண்ணீர் என்று ஒரு அமுதம்’ (Sir C.V.Raman “Water: the elixir of life”) எனும் கட்டுரையில் இதை எழுதியிருக்கிறார்.அவர் மேலும் கூறுகிறார்.
“தண்ணீரைப் பற்றிய ஓர் அசாதாரணமான உண்மை, நுண்ணிய வண்டல் மண் துகள்களைத் தன்னுள் முழுமையாக நிறைத்துக் கொண்டு சுமந்து செல்லும் அதனுடைய ஆற்றல்தான்! மழைநீரால் தண்ணீரைப் பெறும் ஏரிகளில், அந்தந்த ஏரிநீருக்கே உரித்தான நிறங்களின் மூலத் தோற்றுவாய் இதுதான். மழைநீர்ப் பிடிப்புப் பகுதிகளில் அமைந்துள்ள பூமியின் இயல்பைப் பொறுத்து இந்த நிறங்கள் மாற்றமடைகின்றன.
“வண்டல் மண் சுமந்து செல்லும் நீர், கடலின் உப்பு நீருடன் அதிவிரைவான வேகத்தில் கலந்து சங்கமமாகும் போது, நீரில் கலந்துவரும் மண்படிவுகள் அங்கு பிரிக்கப்பட்டுக் கீழே படிகின்றன. நீரின் நிறம், களிமண்ணின் செந்நிறம் அல்லது வண்டல்மண்ணின் பழுப்பு நிறத்திலிருந்து அடுத்தடுத்துத் தொடர்ந்து மாறி மாறி மஞ்சள், பச்சைநிற இழையோட்டங்களாகி கடைசியில் ஆழ்கடலின் நீலநிறத்தை அடைந்து விடுகிறது.
இவ்வாறு கொண்டு போய்க் குவிக்கப்பட்ட வண்டல் மண் படிவுகளால் மாபெரும் துண்டு நிலங்கள் உருவாக்கப் பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய நிலம், வழக்கமாக மிக வளம் செறிந்ததாகவே இருக்கும்.” என்கிறார் அவர்.
மழை நீர்ப் பிரவாகங்களைக் கட்டுப்படுத்தி, முறையாகப் பயன்படுத்தாமல் அவற்றின் போக்கில் விட்டு விட்டால், வளமான வண்டல்மண் பூமியைக் கூட அரித்தெடுத்து அவற்றைத் தரிசு நிலங்களாக்கி விடும் வல்லமையும் அதே நீரோட்டங்களுக்கு உண்டல்லவா?
அந்த அம்சத்தையும் இக்கட்டுரையின் மையப்பகுதியில் ராமன் ஆராய்கிறார் தண்ணீர் என்ற அமுதம் நஞ்சாகவும் மாறிவிடாமல் தடுப்பது மனிதர்களின் கைகளில்தான் இருக்கிறது என்பதை இதன் மூலம் நினைவூட்டுகிறார் அவர்.
“சாத்தியமான ஒவ்வோர் இடத்திலும் பொருத்தமான வகை மரங்களைத் திட்டமிட்ட வகையில் வளர்ப்பது என்பதுவும் இந்தியாவின் மிக அவசரத்தேவைகளில் ஒன்று.
இத்தகைய தாவரப் பெருக்கம் நாட்டுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசப்படாத ஒரு பெரும் செல்வத்தின் மூலவளமாக அமையும். மண்அரிப்பை அவை தடுப்பதுடன், வீணாகக் கடலில் சென்று சேரும் மழை நீரைப் பாதுகாக்கவும் உதவுபவையாக அமையும்” என்கிறார் ராமன் தீர்க்க தரிசனத்துடன்.
இந்த கட்டுரையில், ராமன் முன்வைக்கும் கருத்துகள் காலத்தைக் கடந்து இன்றைய சூழலுக்கும் பொருந்தும் விதத்தில் உள்ளன. ராமன் விளைவு என்பது தண்ணீர் விளைவுகளைப்பற்றிய அவரது ஆய்வுகளையும் சேர்த்துத்தான் போலிருக்கிறது!   

நன்றி  பாடசாலை 

Tuesday 21 February 2017

பூண்டின் பயன்கள்

பூண்டின்  பயன்கள்  அறிந்துகொள்ள இந்த  லிங்கை  கிளிக்குங்க

https://www.youtube.com/watch?v=bj5QoalQyg8

Monday 20 February 2017

நெகிழி (பிளாஸ்டிக்)

  நெகிழியை  தவிர்ப்போம் 
இயற்கைக்கு மாறுவோம் .
காணெளியை காண்க.


ரூபெல்லா தடுப்பூசி

எங்கள் பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி இன்று (20.02.2017)
காலை 10 மணியளவில் போடப்பட்டது.
அனைவரும் நலம் .



MFG NOV .2016
EXP. OCT  2018

புகழ்பெற்ற கல்லறை வாசகங்கள்


புகழ்பெற்ற  கவிஞர்*  ஷெல்லி  தனது  தாயாரின்  கல்லறையில்  பொறித்திருந்த  கல்லறை  கவிதை.

"சப்தமிட்டு  நடக்காதீர்கள் , இங்கே  தான்  என் அருமைத் தாயார்  இளைப்பாறி கொண்டிருக்கிறார்கள்."

 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம் 

"உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்."

 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*. 

"இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது."

 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம் .

"இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்."

 *அரசியல்வாதியின்  கல்லறையில்*,

"தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது."

 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.* 

"இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்."

இவ்வளவு  தானா வாழ்க்கை❓
ஆம்   அதிலென்ன  சந்தேகம்.
ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான்.
அவனோடு  கூட்டு சேர்ந்து  சர்வாதிகார ஆட்டம்  போட்ட   *முசோலினி*   இறந்த போது  ரஷ்ய  தலை நகரில்  முசோலினியின் பிணத்தை  தலைகீழாக தொங்க  விட்டு   ஒரு வாரம்  வரை  அத்தனை பொதுமக்களும்   தங்களது  செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து  தங்கள் மனக்குமுறலை  தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
நாம்  *எதை*  ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்❓
நமது  *பதவியா?*
நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
நமது  *படிப்பா?*
நமது  *வீடா?*
நம்  முன்னோர்களின் *ஆஸ்தியா?* 
நமது  *அறிவா?*  
நமது  *பிள்ளைகளா?*
எது  நம்மைக் காப்பாற்றப் போகிறது?

*ரத்தம்  சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின்   எதுவுமே  நம்மை காப்பாற்றப் போவதில்லை*.
*பசித்தவனுக்கு  உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு  உடை கொடுத்து,  எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.*
கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும்  சமூகத்தில் வாழும்  நாம்   எச்சரிக்கையோடு  நம்மை  காத்துக்கொள்ள  வேண்டும்.
*ஒரே முறை வாழப்போகிறோம*் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை  செய்வோம்   நன்மைகளை  ஆயிர மடங்காக.
*பிறரை  வாழ  வைத்து  வாழ்வோம்.*

Saturday 18 February 2017

வீடு எரிகிறது (கதை )

ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.
⚁ "அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். .
⚂ "அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. 
⚄ "இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.
⚁ "ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. .
⚄ "வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.  
⚀ "ஐயோ என் வீடு ! என் வீடு ! என்று அலறினான்.
⚁ "அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள் ?
⚁ "இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். .
⚀ "இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான்.
⚃ "இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.
⚄ "அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.
⚂ " இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
⚀ " அதே வீடு தான் " ,
⚁ " அதே நெருப்பு தான் " ,
⚃ "ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.
⚀ "" சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?
நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்.
முழு தொகை இன்னும் வரவில்லை.
⚃ "வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். .
⚁ "இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.
⚀ "தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
⚃ "சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும்.
⚃ "இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது.
⚀ "ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்.
⚀ "இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.
⚀ "கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.
⚀ "மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
⚀ " இங்கு எதுவுமே மாறவில்லை " ,
⚀ " அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு ",
⚀ " இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது.
⚀ " இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. .
⚀ " நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று.
⚀ "உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை.
⚀ " ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது.
⚂ "நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினால் என்றும் கவலையில்லை..
அன்பாய் இருப்போம்..
பண்பாய் இருப்போம்..
அழிவிற்குப் பின்
அனைவரின் நெஞ்சில் நீங்காமலிருப்போம்...!!

Wednesday 15 February 2017

தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்து கொள்வதற்கான வழிமுறைகள்

           வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன, தமிழக அரசுப் பதிவேட்டில் பெயர் மாற்றம் செய்வது எப்படி?

பெயர் மாற்றம் செய்வதற்கான தகுதிகள்:

  • தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.


தேவையான ஆவணங்கள்:

  • பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும். பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
  • சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
  • பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
  • தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
  • மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்  பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
  • தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் + அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை:
  • அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
  • அஞ்சல் மூலம் செலுத்த: உதவி இயக்குநர் (வெளியீடுகள்), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-600 002 என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
  • பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
  • பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
  • பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
  • பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும். அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
  • பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
  • விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
  • விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
  • பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
  • இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
  • வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது?

அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.

தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:

சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும். பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும். கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை (Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:
உதவி இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

http://www.stationeryprinting.tn.gov.in/servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.

http://www.stationeryprinting.tn.gov.in/forms.htm விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.

தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:

சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும். இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.



நன்றி பாடசாலை