Thursday 30 January 2014

அதிசயம் ஆனால் உண்மை


அதிகபட்சம்  14 எழுத்துக்களை மட்டும்  டைப்  செய்து   429பக்கங்களை  உருவாக்க  முடியுமா?    முடியாதுதானே ............................................................................................முடியாது ...................................................................................................ஆனா  முடியும்  எப்படி ?...........................அது  இப்படி    முயற்சி செய்து பாருங்கள்
எம் .எஸ். வேர்ட் டை  ஓபன் பண்ணிக்கொள்ளுங்கள்  அதில் கீழ்கண்டவாறு   டைப் செய்யுங்கள்     =rand(150,100)  பிறகு என்டர் பட்டனை தட்டி பாருங்கள்   மலைத்துபோவீர்கள் .

Saturday 25 January 2014

இந்தியக் குடியரசு தினம்

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்
இந்தியாவில் சுமார் 200 நுற்றாண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்த ஆங்கில ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், தேசிய அளவிலும், மாநில அளவிலும், பல கழகங்களையும், புரட்சிகளையும், அகிம்சை வழியில் பலப் போராட்டங்களையும் நிகழ்த்தி தன்னுடைய குருதியையும், தேகங்களையும் தமது தாய் நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும் நினைவுக்கூரும் நாள், ‘குடியரசு தினம்’ ஆகும்.
 ஆரம்ப காலத்தில் நமது மன்னர்கள் ஒற்றுமையாக இல்லாமல், இந்தியாவை சிறு சிறு மாநிலங்களாகப் பிரித்து ஆட்சி செய்து கொண்டிருந்ததால், வணிகம் செய்வதற்காக இந்தியாவில் நுழைந்த பிரிட்டிஷ்காரர்கள், படிப்படியாகத் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்தி, இந்தியா முழுவதும் கொடுங்கோல் ஆட்சியை அரங்கேற்றினர். அத்தகைய கொடுங்கோல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா விடுதலைப் பெற்றது.
 இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே ஒரு நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு அடையலாம் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. மேலும், அத்திருநாளில் தமது தாய் நாட்டினை அந்நியர்களின் பிடியிலிருந்து காப்பாற்றி, பாரத மண்ணில் ஒவ்வொரு மனிதனும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படுவதற்கான காரணம்
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் “பூரண சுயராஜ்யம்” (முழுமையான சுதந்திரம் என்பது பொருள்) என்பதே நமது நாட்டின் உடனடியான லட்சியம், என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, காந்தியால் இந்தியத் தன்னாட்சிக்கான சாற்றல் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் முதற்கட்டமாக “சுதந்திர நாளாகக்” கொண்டாடப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்தியக் குடியரசு தினம்
1946 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் காங்கிரஸ் கட்சியால் இந்திய அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, அதன் தற்காலிகத் தலைவராக சச்சிதானந்த சின்கா என்பவரை நியமித்தது. ஆகஸ்ட் 15 1947 இந்திய விடுதலைக்குப் பிறகு,  இந்திய அரசியல் நிர்ணய சபைத் தலைவராக டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டார். அவரே விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். அதன் பிறகு, இந்திய அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டு, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் அமைப்பு சாசன் எழுதப்பட்டது. முகவுரை, விதிகள், அட்டவணைகள், பிற்சேர்க்கை, திருத்த மசோதாக்கள் போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டு நீண்ட ஆவணமாக எழுதப்பட்ட இந்த சாசனம், இந்திய அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, மக்களாட்சியைக் குறிக்கோளாகக் கொண்டு நிறைவேற்றப்பட்டதால், 1930 ஜனவரி 26 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
குடியரசு என்பதன் பொருள்
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். அதாவது, தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய ஆட்சியாளர்களைத் தேர்தேடுத்துகொள்ளும் முறைக்கு குடியாட்சி எனப்படுகிறது. “மக்களுக்காக, மக்களுடைய மக்கள் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு இலக்கணம் வகுத்துத் தந்தவர், அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன். அத்தகைய மக்களுக்கான அரசை இந்தியாவில் ஏற்படுத்தினால்தான், இந்தியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கருதி உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
குடியரசு தினக் கொண்டாட்டம்
இந்திய விடுதலைக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாளை இந்திய தேசிய குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள், இந்திய  மூவண்ணக் கொடியை ஏற்றி, இந்த குடியரசுதினக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் நாள் தம்முடைய தாய் திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் விடுமுறை அளிக்கப்பட்டு, நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறந்த சேவை புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள், பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்ற சிறப்பு பெற்ற ஜவர்ஹலால் நேரு அவர்களின் முன்னிலையில் முதல் குடியரசு தின அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், அன்றைய நாள் புது தில்லியில் குடியரசுத்தலைவர் முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்த்தி அணிவகுப்பு நடைபெறும்.
இன்றைய பொழுதில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, என்பதில் பெருமைக் கொள்கிறோம் என்றால் அதன் பின்னணியில் லட்சக்கணக்கான போராளிகளின் குருதியும், ஆயிரக்கணக்கான தேசத் தலைவர்களின் தியாகமும் மறைந்திருக்கிறது என்றால் யாராலும் மறுக்க இயலாது. சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

உங்கள் ANDROID மொபைல் காணவில்லையா?



{ இதை முயற்சித்து வெற்றி பெற்றபின் 

 உங்களுக்கு பகிர்கிறேன். குறிப்பு உங்கள் 

போனில் நெட் இணைப்பிலும்G MAIL. 

LOG..இருக்கவேண்டும்   }

உங்கள் ANDROID மொபைல்

காணவில்லையா கவலை வேண்டாம்

இதோ உங்கள் விலை உயர்ந்த அன்ராய்த் 

மொபைல்காணாமல் போய் உள்ளதா ...?

அதாவது நீங்கள் செய்வது ஒன்று 

மொபைலில் G MAIL. LOG.. 

இருக்கவேண்டும் சுலோபமாக கண்டு 

பிடித்து விடலாம் ..குறிப்பு ..உங்கள் 

மொபைலை திருடி இருந்தால் கண்டு 

பிடிக்க முடியாது ஏனென்றால் எடுத்தவர் 

உடனே சிம் மார்றி விடுவார்கள் { சிம் 

மார்ர்பபட்டால் கூட நான் சொல்லும் 

முறையில் சுலோபமாக கண்டு 

பிடிக்கலாம் ] 

உதாரணமாக உங்கள் வீட்டில் மொபைல் 

கணவில்லை என்று 

வைத்துக்கொள்வோம் அதுவும் SILANT 

MODE.இருந்தால் கூட சுலோபமாக கால் 

செய்து எடுத்து விடலாம் நான் 

சொல்லுவதை கொன்சம் முயற்சி பண்ணி 

பாருங்கள்


 silent mode கூட ரிங்க் கொடுக்க முடியும் 

உங்களுக்குஇந்த பதிவு மிகவும் பயன் 

உள்ளதாக அமையும் வாங்க .. இதோ கீழே 

உள்ள சுட்டியை கிளிக் செய்யவும் உங்கள் 

கணினி அல்லது உங்கள் நண்பரின் 

கணினி அல்லது மொபைல் இல் 

பார்கலாம் காணாமல் போன ஆண்ராய்த் 

மொபைலை g mail log செய்து கீழே உள்ள 

முகவரியை டைப் செய்யவும்

 செய்த உடனே உங்கள் மொபைல் மாடல் 

கடைசியாக எந்த இடத்தில் லாக் செய்தது 

என்ற தகவல் இருக்கும் வலது பக்கத்தில் 

மேப்பிலும் வரைபபடத்திலும் அந்த 

இடத்தை காணலாம் ரிங்க்எனபதை.கிளிக் 

செய்தால் உடனே ரிங்க் கொடுக்கும் இதை 

உங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் .
..please share




இன்று தேசிய வாக்காளர்த்தினம் எங்கள் பள்ளியில் கொண்டாடப்பட்டது.







Wednesday 22 January 2014

[23.05.1967] தமிழ் ஆட்சி மொழி


திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது, செம்மொழியுமான தமிழ் 1957 ஆம் ஆண்டு இதே நாளில் சென்னை மாநிலத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. ஒரு மொழியை தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் தமிழ் மொழி உள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டிலும், புதுச்சேரி ஒன்றிய பகுதியில் தமிழ் அரசு அலுவல் மொழியாக உள்ளது. இந்தியாவில் 2004-ம் ஆண்டு ஜுன் 6-ம் தேதி அப்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்களால் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழ் என்பது பெருமைப்படக்கூடியது. 

{ஜன. 23, 1897} நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்


இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதேநாளில் வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத் தலைவர்களாகவும், நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரவு வழியை உடையது. இவரது தாயார் பிரபாவதி தேவி ‘தத்’ எனும் பிரபுக் குலத்திலிருந்து வந்தர். 8 ஆண் பிள்ளைகளையும் 6 பெண் பிள்ளைகளையும் கொண்ட இக்குடும்பத்தில் ஒன்பதாவது பிள்ளையாக இவர் பிறந்தார். சிறு வயது முதலே பல பிள்ளைகளுடன் வளர்ந்தபடியால் சந்திரபோஸ் தன் சிறு வயதில் தாய், தந்தையரைவிட தன்னை கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார். 
ஆஸ்திரியாவை சேர்ந்த எமிலியை காதலித்து, 1937 டிசம்பர் 27-ல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1942-ல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வடஇந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்துவிட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 
1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது. ஆனால் இந்திய அரசு அவ்வறிக்கையை ஏற்கவில்லை.
1992-ல் சுபாஷ் சந்திரபோஸுக்கு இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.






நன்றி மாலைமலர்

COMPUTER

COMPUTER என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா??...

நாம் எத்தனையோ ஆண்டுகளாக COMPUTER பயன்படுத்தி வருகிறோம்


ஆனால் இன்னும் சிலருக்கு COMPUTER 'ன் முழு பெயர் தெரியவில்லை. 

அவர்களுக்காக இதை எழுதுகிறேன்.

C - Common


O - Oriented

M - Machine


P - Particularly


U - Used for


T - Trade


E - Education and


R - Research

COMPUTER - Common Oriented Machine Particularly 


Used for Trade Education and Research

Sunday 19 January 2014

இஞ்சியின் மருத்துவ குணங்கள்!


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியணுக்கு
மிஞ்சிய சாமியும் என்று சொல்வார்கள் ! 

இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக்
கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்குமிளகுதிப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும்.

சுக்குமிளகுதிப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை
தரக்கூடுயதாக இருக்கிறது

இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும்.
வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு
அருமருந்தாக உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது
தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக
இருக்க உதவுகிறது;கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத்
தூண்டி இருதயசுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி
வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளீரின் கருப்பை வலிக்கும்மாதவிலக்கு நேரங்களில் 
அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம்காயங்கள்சிரங்குகள்

போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத்
தூண்டுவதுடன்தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள்சிறுகுடல்பெருங்குடல் உள்ளிட்டவை
இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு
காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு 
புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது

வெள்ளைப்பூண்டும்இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் 
செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு

இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டுஅதை நசுக்கி உடம்பில் தேய்க்க 
பித்தகப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில்வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் 

ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
காலையில் இஞ்சி சாறில்உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த 
தலைச்சுற்றுமலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடுதேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில்

ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் 
பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில்தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு

வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன்வெங்காய சாறு கலந்து ஒரு வாரம்காலையில் 

ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் 

ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்

கொள்வதுஇதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும்
என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு

வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி
உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்செயற்பாடு குன்றி
ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் 
ஏற்படுவதாகவும்இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் 
செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் 

தடுத்தும்மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் 
கூறுகின்றன.
இஞ்சியையும்சுக்கையும் உபயோகிக்கும் போதுஅதன் தோலை 

நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு 
முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க

வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் 
செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் 
அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானதுசுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக

நறுக்கி 150 கிராம் எடுத்துஅத்துடன் சுத்தமான தேனையும் அதே 
அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு 
துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் 
ஆரோக்கியம் அடைந்துபித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். 
ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும்அழகும் கூடும்.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து

சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக்
கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம்புளியேப்பம்
வாந்திகுடல் கோளாறுகப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு 
நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா 
தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக்

குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். 
சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.
எந்த பானம் குடித்தாலும்அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து 

குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு 
அவஸ்தைப்பட வேண்டாம்.

உங்களுக்கு தெரியுமா..?

வெங்காயம் நறுக்கும் போது, சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது..


குழந்தைகள் 6 மாதம் வரை ஒரே நேரத்தில் மூச்சும், முழுங்கவும் முடியும்..

புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள்.

ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொசுக்கள் தான் கடிக்கும். ( கொசுக்களிலுமா?)

சராசரி மனிதனின் விழிகள் 200 டிகிரி வரை திரும்பும்.

தர்பூசணி, தட்டும் போது ஹாலோ சத்தம் வந்தால், காயாக உள்ளது என அர்த்தம்.

கனடா நாட்டவர், தங்களின் புகைபடத்தை ஸ்டாம்பாக பயன் படுத்த முடியும்.

8 மாதம் வரை குழந்தைகள் அழும் போது கண்ணீர் வராது.

சகாரா பாலைவனத்தில் பனி மழை 1979 பிப்ரவரியில் பெய்தது.

இயர் போன் ஒரு மணி நேரம் அணிந்தால், 700 முறை பாக்டீரியா வளரும்.

திராட்சையை மைக்ரோ ஓவனில் சூடு படுத்தினால், வெடிக்கும்.

கண்கள் தான் பிறந்ததில் இருந்து வளராமல் அப்படியே இருக்கும்.

எல்லாருடைய நாக்கு ரேகைகள், கை ரேகைகள் போல வேறு விதமாக இருக்கும்.

40 டிகிரி வெப்பத்தில், 14.4 கலோரிகள் ஒரு மனிதன் இழ்ப்பான்.

சுவீடனில், ஒரு ஹோட்டல், ஐஸினால் கட்டப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வருடமும் 

மீண்டும் கட்டப்படும்.

பூனை, ஓட்டகம் மற்றும் ஓட்டக சிவிங்கி மிருகங்கள் தான், வலது, வலது, இடது,

இடது என நடக்கும், மற்றவையெல்லாம் வலது, இடது என நடக்கும்.

வெங்காயம், கொழுப்பை குறைக்கும்.

பெரும்பாலான கை கடிகாரம் விளம்பரத்தில் காட்டப் படும் 10:10, புன்னகையை குறிக்கும்.

நீல நிறம், மக்களை அமைதி படச் செய்யும். மனித மூளை, 11 வகை இராசாயணத்தை 

அமைதி படுத்த அனுப்புகிறது.


லியானார் டா வின்சி, ஒரே நேரத்தில், ஒரு கையால் எழுதவும், 

மறு கையால் வரையவும் செய்வார்.

15 எழுத்து ஆங்கில வார்த்தை, எழுத்துக்கள் திரும்ப வராத வார்த்தை: uncopyrightable

குழந்தைகள் பிறக்கும் போது மூட்டுகள் இல்லாமல் தான் பிறக்கின்றனர்.

 2 - 6 வயதில் தான் வளர்கிறது.

எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் மூக்கு கண்ணாடி அணிவார்கள்.

வறுக்காத முந்திரி கொட்டை விஷ தன்மை உடையது.

சூயிங்கத்தை முழுங்கினால், வயிற்றில் தங்காமல், தானாக வெளியேறி விடும்.

கண்களை கசக்கும் போது தோன்றும் நட்சத்திரம் மற்றும் கலர்கள், பாஸ்பீன்ஸ் எனப்படும்.

Thursday 16 January 2014

தவளையும் குதிரையும்


இதில்  குதிரையும்   உள்ளது  கண்டுபிடித்தால்  நீங்களும்   புத்திசாலிதான்.



Photo: This is going to be real challenge .. 99% of people can't find the horse. If you see the horse then share with your friends. Ask them to find :D

Wednesday 15 January 2014

உஷார் உஷார் உஷார் உஷார் !!! ஷேர் பண்ணுங்க

FRIENDS.. plz plz plz   DRESSING ROOM ல

கேமரா மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம் பிடிக்க படுகின்றனர்..!

அதை தடுக்க ஒரு அருமையான ஆலோசனை....!!

TRIAL ROOM ல் உங்களலோட செல் போன்ல

இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள்,

உங்கள்     போனில்    இருந்து    கால்   பண்ண 
முடியவில்லை     என்றால்
அங்கு   கேமரா    பொருத்தப்பட்டுள்ளது 

என்று    அர்த்தம்  காரணம் "FIBER OPTIC SIGNAL" செல் போன்
சிக்னலை தடுக்க கூடியது..!  அப்படி கால்
பண்ண முடியவில்லை என்றால்... 
உஷார்..!!!  நீங்கள் நோட்டமிடபடுகிறீர்கள்....!!!
இதை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க
FRIENDS..

Tuesday 14 January 2014

சிறுநீரக கற்கள் (கிட்னி ஸ்டோன்)





சிறுநீரக கற்கள் (கிட்னி ஸ்டோன்) பற்றி தெரியுமா உங்களுக்கு ???

உடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பையில்சிறுநீரகத்தில்
சிறுநீர் பாதையில் கல் உருவாவது சகஜம். இந்தியாவில் 80 லட்சம் மக்கள் 
வரைஇந்த உபாதையால் பாதிக்கப்படுகின்றனர். கிட்னி ஸ்டோன்’ என்பதால்,அது 
சிறுநீரகத்தில் மட்டும் தான் ஏற்படும் என்று கருதக் கூடாது. சிறுநீரை 
வெளியேற்றக் கொண்டு   செல்லும் பாதையில் ஏற்படலாம். சிறுநீரைத் தேக்கி
வைக்கும் பையில் ஏற்படலாம். சிறுநீரை வெளியேற்றும் இறுதி உறுப்பில்
ஏற்படலாம். மிகச்சிறிய  கல்லாகவும் தோன்றலாம்ஒரு எலுமிச்சை 
அளவுக்கும் ஏற்படலாம். கல்லின்அளவு பொறுத்துவலியின் தீவிரம் 
இருக்கும் எனக் கருதுவது தவறு. பெரிய கல்வலியே இல்லாமல்
வளரலாம். கண்ணுக்கே தெரியாத சிறிய கல்அதிக
வலி கொடுக்கலாம். கல் உருவாவதால் ஏற்படும் வலியைபிரசவ வலியோடு
ஒப்பிடலாம். எவ்வளவு பெரிய பலசாலியையும் ஆட்டிப் போட்டு
விடும் இந்த வலி.

சிறுநீர் செல்வதில் சிரமம் ஏற்படுவதில் துவங்கிஇருபக்க இடுப்பின் பின்
பக்கத்திலிருந்து அலை போல வலி உருவாகிபிறப்புறுப்பு வரை பரவும்.
சிரமப்பட்டு வெளியேற்றப்படும் சிறுநீர் அதிக மஞ்சள் நிறத்துடன் காணப்படும்.
சிலருக்கு சொட்டு சொட்டாகவும் வெளியேறும். இதனால் தொற்று ஏற்பட்டால்
காய்ச்சல் உண்டாகும். வெப்ப பகுதிகளில் வசிப்போருக்குஉடலில் நீர்சத்து 
குறையும் போதுஇதுபோன்று கற்கள் அடிக்கடி ஏற்படும். 

40 – 60 வயதுள்ள ஆண்களிடையே இந்த உபாதை அதிகம் காணப்படுகிறது.
பரம்பரையாகவும் இது ஏற்படலாம். கல் உருவாகிசிகிச்சை எடுத்து
கொண்டோரில் 50 சதவீதத்தினருக்கு, 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கல் 
தோன்ற வாய்ப்பு உண்டு. உடலில் உள்ள மொத்த ரத்தமும்சிறுநீரகம் வழியே
செல்கிறது. ரத்தத்திலிருந்து நீரையும்,ரசாயனங்களையும்சிறுநீரகம் பிரிக்கிறது. 
ரசாயனங்கள் கல் ஆகாமல் இருக்கசிறுநீரகமும் சில கரைப்பான்களைசுரக்கிறது. 
அதையும் மீறி தோன்றும் சிறு கல்கள்ஒன்றாகச் சேர்ந்து பெரிய கல்லாக
உருவாகி விடுகின்றன.

சிறுநீரகத்தில் கரைப்பான்கள் சுரப்பதில்பரம்பரையாகத் தடை கொண்டவர்களுக்கு
கல் உருவாவது சகஜம். அடிக்கடி தொற்று ஏற்பட்டாலோசிறுநீர் அடர்த்தியாக
இருந்தாலோஅடிக்கடி வெகுநேரம் சிறுநீரை அடக்குபவர்களுக்கோ கூட,
கரைப்பான்கள் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். மூட்டு வீக்கத்தால் 
பாதிக்கப்படுபவர்களின் உடலில் உப்பு அதிகம் சுரப்பதாலும்சிறுநீரகத்தில்
கல் உருவாகும்.

எந்த அறிகுறியும் தெரியாத சிறுநீரகக் கல்லைஅல்ட்ரா சவுண்டு ஸ்கேன்
அல்லது எக்ஸ்-ரே எடுத்து பார்த்து அறிந்து கொள்ளலாம். வலி போன்ற
பொதுவான அறிகுறிகளைச் சொன்னாலேகல் இருக்கிறதா என்பதை பரிசோதிக்க
இது போன்ற பரிசோதனைகளை எடுக்குமாறுடாக்டர் பரிந்துரைப்பார். 
சில நேரங்களில்ஐ.வி.பி.என்றநரம்பில் சாயம் ஏற்றிகல் இருக்கும் 
இடத்தையும்அதன் அளவையும் கண்டறியும் பரிசோதனையும் 
செய்யப்படுகிறது. கற்களை நீக்க,பெரும்பாலான நேரங்களில்
கடுமையான சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 

நாள் ஒன்றுக்குநான்கைந்து லிட்டர் தண்ணீர் குடிப்பவருக்குசிறுநீரகத்தில் கல்
இருந்தாலும்சிறுநீர் மூலம் வெளியேறி விடும். வலி ஏற்பட்டால்வலி நிவாரணி 
மாத்திரைகள் சாப்பிடலாம். கல்லில் உள்ள ரசாயனங்கள்குறித்து அறிந்து 
கொண்டால்,அதை வைத்துமருந்துஉணவுக் கட்டுப்பாடுகளை டாக்டர்
பரிந்துரைப்பார்.தொடர்ந்து கடும் வலிமிகப்பெரிய கல் ஆகியவை இருந்தால்,
அறுவை சிகிச்சைமூலம் மட்டுமே அதை அகற்ற முடியும்.

கல் வளர்ந்து கொண்டே இருப்பதுதொடர் தொற்று ஆகியவைசிறுநீரகத்தை
பாதிக்கும் என்பதால்இதுபோன்ற நிலைகளில்அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 
சிறுநீரகத்தை திறந்துஅறுவை சிகிச்சை மேற்கொள்வது இல்லை. கல் இருக்கும் 
இடத்தில்உடலின் மேற்புறம்மின் அலைகள் உருவாக்கப்படுகிறது. இந்த
அதிர்வலைகள்கல்லைத் தாக்கிஅதை உடைக்கின்றன. பொடியான கற்கள்
சிறுநீர் வழியே வெளியேறி விடும். சிறுநீர் பாதையை கல் அடைத்து கொண்டால்
செயற்கை குழாய் பொருத்தி கல்லை அகற்றலாம். வேறு சிகிச்சை
முறைகளும் உள்ளன. 

இந்த உபாதை, 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருத வேண்டாம்.
7,000 ஆண்டுக்கு முன்னால் இறந்த மனிதர்களிடமும் இது காணப்பட்டது.
தற்போது சிறு வயதினர்குறிப்பாக குழந்தைகளிடம் இந்த உபாதை
காணப்படுகிறது. சீனாவில்பால் பவுடரில் உள்ள மெலாமைன்
என்ற பொருளால்குழந்தைகளுக்கு சிறுநீரகக் கல்உருவாவதாகக்
கண்டறியப்பட்டுள்ளது. 

மற்ற நாடுகளில்குழந்தைகள் அதிக உடல் எடையுடன் இருப்பதுஉடல் பயிற்சி
இல்லாமல் இருப்பது,காற்றூட்டப்பட்ட குளிர்பானங்களை குடிப்பது போன்ற 
காரணங்களால்கல் உருவாகிறது.