Sunday 19 January 2014

இஞ்சியின் மருத்துவ குணங்கள்!


சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியணுக்கு
மிஞ்சிய சாமியும் என்று சொல்வார்கள் ! 

இஞ்சி காய்ந்தால் சுக்கு ஆகும். இது பல மருத்துவப் பயன்களைக்
கொண்டிருக்கிறது. இதன் பயன்களைப் பற்றி கீழே காண்போம்.
சுக்குமிளகுதிப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும்.

சுக்குமிளகுதிப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை
தரக்கூடுயதாக இருக்கிறது

இஞ்சி மஞ்சள் போலவே இருக்கும் ஒரு விவசாய பயிராகும்.
வேரில் மஞ்சள் போலவே இருக்கும். இது பல நோய்களுக்கு
அருமருந்தாக உள்ளது.
ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது
தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக
இருக்க உதவுகிறது;கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத்
தூண்டி இருதயசுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது.
மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி
வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
மகளீரின் கருப்பை வலிக்கும்மாதவிலக்கு நேரங்களில் 
அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது.

தோலில் உண்டாகும் உலர்சருமம்காயங்கள்சிரங்குகள்

போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத்
தூண்டுவதுடன்தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது.
உடலின் ஜீரண உறுப்புகள்சிறுகுடல்பெருங்குடல் உள்ளிட்டவை
இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு
காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு 
புத்துணர்ச்சியை தருகிறது.
பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது

வெள்ளைப்பூண்டும்இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள்.
இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் 
செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு

இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டுஅதை நசுக்கி உடம்பில் தேய்க்க 
பித்தகப நோய்கள் தீரும்.
இஞ்சி சாறில்வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் 

ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு.
காலையில் இஞ்சி சாறில்உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த 
தலைச்சுற்றுமலச்சிக்கல் தீரும்.
இஞ்சி சாறோடுதேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில்

ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் 
பெருவயிறு கரைந்து விடும்.
இஞ்சி சாறில்தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு

வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.
இஞ்சி சாறுடன்வெங்காய சாறு கலந்து ஒரு வாரம்காலையில் 

ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இதய நோயாளிகளுக்காக இந்திய மருத்துவக் கழகம் சமீபத்தில் 

ஒரு ஆய்வுச் செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொருநாளும் உணவில் ஐந்து கிராம் இஞ்சியைச் சேர்த்துக்

கொள்வதுஇதய நோயாளிகளுக்கு மாரடைப்பை வராமல் காக்கும்
என்கிறது அந்தச் செய்தி.
பொதுவாக நாம் அரிசியையே பிரதான உணவாகத் தினமும் உண்டு

வருகிறோம். இப்படிப் பல ஆண்டு காலம் அரிசியை தினசரி
உணவாகக் கொள்பவர்களுக்கு, 'பைப்ரினோலிடிக்செயற்பாடு குன்றி
ரத்தக் குழாய் அடைப்பைக் கரைக்கும் நடவடிக்கையில் சுணக்கம் 
ஏற்படுவதாகவும்இதனை இஞ்சி சரி செய்வதாகவும் இந்த ஆய்வுச் 
செய்தி தெரிவிக்கிறது.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் 

தடுத்தும்மேலும் உண்டாவதைக் கரைத்தும் உதவுவதாக ஆய்வுகள் 
கூறுகின்றன.
இஞ்சியையும்சுக்கையும் உபயோகிக்கும் போதுஅதன் தோலை 

நீக்குவது மிக முக்கியமானது. இல்லை எனில் மாறாக வயற்றுக் கடுப்பு 
முதலியவை ஏற்படும்.
இஞ்சியை சுத்தம் செய்யும்போது அதன் மேல் தோலை நன்றாக நீக்க

வேண்டும் அதன் மேல் தோல் நஞ்சாகும். அதே போல் சுக்கை சுத்தம் 
செய்யும்போது அதன் மேல் சுண்ணாம்பை தடவி காயவைத்து பின் 
அதை நெருப்பில் சுட்டு பின் அதன் தோலை நன்கு சீவி எடுக்கவேண்டும்.
இது மிக முக்கியமானதுசுத்தம் செய்யாமல் உபயோகிக்க வேண்டாம்.

இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக

நறுக்கி 150 கிராம் எடுத்துஅத்துடன் சுத்தமான தேனையும் அதே 
அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து தினமும் ஒன்றிரண்டு 
துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் 
ஆரோக்கியம் அடைந்துபித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். 
ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும்அழகும் கூடும்.
மலபார் இஞ்சி முறபா பெயர் பெற்றது. இஞ்சியைப் பக்குவம் செய்து

சர்க்கரைப் பாகுடன் பதப்படுத்தித் தயாரிப்பது. இது நாட்டு மருந்துக்
கடைகளிலும் கிடைக்கும். இதனால் வயிற்று உப்புசம்புளியேப்பம்
வாந்திகுடல் கோளாறுகப நோயால் மார்பில் சளி சேர்ந்து இரைப்பு 
நோய் தொல்லை வரும்போது மிக்க பயன் தரும். இஞ்சி முறபா 
தின்பதற்கும் ருசியாக இருக்கும்.
தினம் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து ஒரு டம்ளர் மோரில் கரைத்துக்

குடித்தால் இடுப்புப் பகுதியில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும். 
சேர்த்த கொழுப்பையும் கரைக்கும்.
எந்த பானம் குடித்தாலும்அதில் ஒரு கரண்டி இஞ்சி சாறை கலந்து 

குடியுங்கள். 40 வயதுக்கு பின் மூச்சை பிடித்துக்கொண்டு 
அவஸ்தைப்பட வேண்டாம்.

No comments: