Friday 26 April 2013

வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்


வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்

நல்லோர் மனதை நடுங்க செய்யாதே.

தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே.

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே.

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே.

பொருளை இச்சித்து பொய் சொல்லாதே.

பசித்தோர் முகத்தைப் பாராதிராதே.

இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே.

குருவை வணங்கக் கூசி நிற்காதே.

வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே.

No comments: