Thursday 11 December 2014

பாரதியார் பற்றிய பாடல் !
"ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி "என்ற பாடல் மெட்டு !
பாரதியார் பிறந்த நாளில் பள்ளிகளில் பாடலாம்
பல்லவி
பார் பார் பார் எங்கள் பாரதியை

கார் கார் முகிலென கவி பொழிந்தார்

நிமிர் நிமிர் நிமிர் என்றார் பெண்ணினத்தை !

பின்பற்றுவோம் என்றும் அவர் கருத்தை !
சரணம் 1
கண்ணன் பாஞ்சாலி பாட்டுரைத்தார்

கார்த்திகை மாதத்தில் கண் விழித்தார்

எட்டையபுரத்தில் அவதரித்து

எட்டுத் திக்கும் புகழ் கொண்டார் !
சரணம் 2
அவர் தான் அறிவுக்கண் திறந்து வைத்தார்

அவர் போல் பலரும் முயன்றுரைத்தார்

முண்டாசு கவிஞர் பாரதி போல்

முயல்வோம் நாமும் நலம் பெறவே !

நன்றி: திருமதி.D.விஜயலட்சுமி ராஜா அவர்கள், ஆங்கில ஆசிரியை , அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம், திருவண்ணாமலை மாவட்டம்.

No comments: